சனி, ஆகஸ்ட் 05, 2017

குறள் எண்: 0734 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0734}

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு

விழியப்பன் விளக்கம்: அதீத பசி/தீராத நோய்/அண்டை நாட்டுப் பகை - இவை மூன்றும்; தன்னைச் சேராது, காக்க முயல்வதே நாடாகும்.
(அது போல்...)
அதீத மோகம்/குறையாத மனவுளைச்சல்/உறவை வஞ்சிக்கும் தீக்குணம் - இவை மூன்றும்; தனக்கு இல்லாமல், வாழ முயற்சிப்பதே ஒழுக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக