புதன், ஆகஸ்ட் 09, 2017

குறள் எண்: 0738 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0738}

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

விழியப்பன் விளக்கம்: உயிரழிக்கும் நோய் இல்லாமை/பல்வகைச் செல்வங்கள்/குறையாத விளைச்சல்/இயல்பான இன்பம்/வலிமையான காவல் - இவை ஐந்தும், நாட்டை அலங்கரிக்கும் அணிகலன்கள் ஆகும்.
(அது போல்...)
உணர்வழிக்கும் மூர்க்கம் இல்லாமை/பல்வேறு நற்குணங்கள்/பரஸ்பர புரிதல்/புனிதமான உறவு/உண்மையான ஒழுக்கம் - இவை ஐந்தும், வாழ்வை சிறப்பிக்கும் காரணிகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக