சனி, ஆகஸ்ட் 12, 2017

குறள் எண்: 0741 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0741}


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்

விழியப்பன் விளக்கம்: போர்களை வென்று மக்கள் பணியாற்றுவோர்க்கு, அரண் முக்கியமானது; போருக்குப் பயந்துத் தம்மைக் காக்க முயல்வோர்க்கும், அரணே முக்கியமானதாகும்.
(அது போல்...)
அறத்தைப் பழகி நற்செயல் புரிவோர்க்கு, மனசாட்சி புனிதமானது; அறத்துக்குப் புறம்பாகித் தம்மைச் சிதைத்துக் கொள்வோர்க்கும், மனசாட்சியே புனிதமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக