ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

குறள் எண்: 0742 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0742}

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான அரண்களாகும்.
(அது போல்...)
மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக