புதன், ஆகஸ்ட் 16, 2017

குறள் எண்: 0745 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0745}

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்

விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே அரணாகும்.
(அது போல்...)
பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும் மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக