வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

குறள் எண்: 0754 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0754}

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்

விழியப்பன் விளக்கம்: பின் விளைவுகளை உணர்ந்து, தீமை ஏதுமின்றி கிடைத்த செல்வம்; அறச்செயல்களை மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் பெருக்கும்!
(அது போல்...)
தொடர் நிகழ்வுகளை அறிந்து, ஒழுங்கீனம் ஏதுமின்றி செய்த செயல்; நற்சிந்தனைகளை மட்டுமின்றி; நேர்மையையும் அதிகரிக்கும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக