வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

குறள் எண்: 0747 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0747}

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல் நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு இயலாததே அரணாகும்.
(அது போல்...)
விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக