வியாழன், ஆகஸ்ட் 10, 2017

குறள் எண்: 0739 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0739}

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு

விழியப்பன் விளக்கம்: பெரு முயற்சியால், செயற்கையான வளங்களைப் பெறும் நாடு உயர்ந்தது அல்ல! பெரு முயற்சியின்றி, இயற்கையான வளங்களைப் பெற்றிருக்கும் நாடே உயர்ந்தது ஆகும்!
(அது போல்...)
உணர்ச்சி வயப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி சிறந்தது அல்ல! உணர்ச்சி வயப்படாமல், உண்மையான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியே சிறந்தது ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக