புதன், ஜூன் 01, 2016

குறள் எண்: 0304 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0304}

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

விழியப்பன் விளக்கம்: முகத்தில் புன்னகையையும், அகத்தில் மனநிறைவையும் அழிக்கும் - சினத்தை விட; கடுமையான பகை வேறெதுவும் உண்டோ?
(அது போல்...)
எண்ணத்தில் பிரிவினையையும், செயலில் சூழ்ச்சியையும் விதைக்கும் - இனவெறியை விட; அதீத தீவிரவாதம் வேறெதுவும் உள்ளதோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக