செவ்வாய், ஜூன் 28, 2016

குறள் எண்: 0331 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0331}

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை

விழியப்பன் விளக்கம்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று, மாயையாய் நம்பும்; அனுபவம் இல்லாத, தவறான-அறிவு இழிவானதாகும்.
(அது போல்...)
உண்மையில்லாததை உண்மையானது என்று, மூர்க்கமாய் நம்பும்; புரிதல் இல்லாத, நிறைவற்ற-உறவு அழிவானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக