ஞாயிறு, ஜூன் 12, 2016

குறள் எண்: 0315 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0315}

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

விழியப்பன் விளக்கம்: பிறரின் துன்பத்தை, நம் துன்பம்போல் பாவிக்காவிட்டால்; பகுத்தாயும் அறிவினால், என்ன பயன் விளையமுடியும்?
(அது போல்...)
மக்களின் இயலாமையை, தம் இயலாமையாய் உணராவிட்டால்; பார்போற்றும் மக்களாட்சியில், என்ன சிறப்பு இருக்கமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக