வெள்ளி, ஜூன் 17, 2016

குறள் எண்: 0320 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0320}

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு துன்பம் செய்பவரையே, துன்பமெல்லாம் சென்றடையும்; எனவே, துன்பம் வேண்டாதவர் - பிறர்க்கு துன்பம் செய்யமாட்டார்.
(அது போல்...)
பிறரைப் புரளிப் பேசுபவரையே, புரளிகள் வந்தடையும்; எனவே, புரளியை விரும்பாதோர் - பிறரைப் புரளிப் பேசமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக