திங்கள், ஜூன் 06, 2016

குறள் எண்: 0309 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0309}

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

விழியப்பன் விளக்கம்: மனதளவிலும், சினம் கொள்ளாமல் இருக்கமுடியும் எனில்; அவர்கள் நினைப்பவை எல்லாம், நினைத்தவுடன் சாத்தியமாகும்.
(அது போல்...)
நகைச்சுவையிலும், அறம் தவறாமல் எழுதமுடியும் எனில்; அவர்கள் படைப்புகள் அனைத்தும், விரைந்து பாராட்டப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக