வெள்ளி, ஜூன் 03, 2016

குறள் எண்: 0306 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0306}

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

விழியப்பன் விளக்கம்: நெருப்பைப் போன்று, சேர்ந்தவரை அழிக்கும் சினமானது; நம்மை மட்டுமன்றி, நம் நலம் விரும்பும் சுற்றத்தையும் அழிக்கும்.
(அது போல்...)
போதையைப் போன்று, பழகியவரைச் சிதைக்கும் கள்ள-உறவானது; உடலை மட்டுமன்றி, நம் சுயம் காக்கும் மனதையும் சிதைக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக