திங்கள், ஜூன் 20, 2016

குறள் எண்: 0323 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0323}

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதது, இணையற்ற தனித்த நல்லறமாகும்; பொய் சொல்லாதது, அதையடுத்து தொடரும் நல்லறமாகும்.
(அது போல்...)
இனவெறி இல்லாதது, ஒப்பற்ற மனித அடிப்படையாகும்; மொழிவெறி இல்லாதது,  அதன்பின் தொடரும் அடிப்படையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக