புதன், ஜூன் 22, 2016

குறள் எண்: 0325 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0325}

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

விழியப்பன் விளக்கம்: இல்லற வாழ்வுக்கஞ்சி, துறவறம் பூண்டோரைவிட; கொலையெனும் பாவத்துக்கஞ்சி, கொல்வதைத் தவிர்த்தோர் உயர்ந்தவராவர்.
(அது போல்...)
சட்டத்தின் தண்டனைக்கஞ்சி, செயலைத் தவிர்த்தோரைவிட; மனசாட்சியின் தண்டனைக்கஞ்சி, எண்ணத்தைத் துறந்தோர் சிறந்தவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக