புதன், ஜூன் 29, 2016

குறள் எண்: 0332 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0332}

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று

விழியப்பன் விளக்கம்: பெருமளவில் சேர்ந்திடும் செல்வம், அரங்கில் நிறைந்திடும் மக்கள் போல்; எந்நேரத்திலும் விலகிவிடும் என்ற நிலையாமையை உணரவேண்டும்.
(அது போல்...)
மனதளவில் இருந்திடும் செயல்கள், ஊதற்பையில் அடைத்திடும் காற்று போல்; எந்நிலையிலும் விடுபட்டிடும் என்ற புரிதலை அறியவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக