வியாழன், ஜூன் 09, 2016

குறள் எண்: 0312 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0312}

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: காழ்ப்புணர்வுடன் தமக்கு கெடுதலைச் செய்தோர்க்கும்; பழியுணர்வுடன் கெடுதலைச் செய்யாத நிலைப்பாடே, குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
கல்நெஞ்சுடன் தன்னை அனாதையாக்கிய பிள்ளைக்கும்; பித்துமனதுடன் அன்பைப் பொழியும் தன்மையே, தாய்மையின் சிறப்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக