வியாழன், ஜூன் 30, 2016

குறள் எண்: 0333 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 034 - நிலையாமைகுறள் எண்: 0333}

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்

விழியப்பன் விளக்கம்: நிலையற்ற தன்மை கொண்டது செல்வம்; எனவே, செல்வத்தைப் பெற்றால் - அது நிலைக்கும் வண்ணம், அறச்செயல்களைச் செய்யவேண்டும்.
(அது போல்...)
அலைபாயும் இயல்பு உடையது சிந்தனை; எனவே, சிந்தனைகள் தோன்றினால் - அவை அலையாய் ஓயாமல், எழுத்துவடிவில் உருமாறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக