புதன், ஜூன் 15, 2016

குறள் எண்: 0318 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0318}

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

விழியப்பன் விளக்கம்: தனக்கு துன்பமானவை எவையென உணர்ந்தோர்; பிற உயிர்களுக்கு, அதே தீமைகளைச் செய்வது, என்ன காரணத்தினாலோ?
(அது போல்...)
தன்-சுயம் இழப்பதன் வலியை உணர்ந்தோர்; பிறரின் சுயத்தை, அதுபோல் இழக்கச் செய்தல், எந்த அடிப்படையிலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக