சனி, ஜூன் 04, 2016

குறள் எண்: 0307 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0307}

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

விழியப்பன் விளக்கம்: சினத்தைப் பொருட்டாய் எண்ணி, அதைக் கையாள்பவரின் அழிவு; நிலத்தை அறைந்தவரின் கைவலியைப் போன்று, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
(அது போல்...)
பணத்தை உயர்வாய் எண்ணி, அதைத் தொடர்பவரின் வீழ்ச்சி, உறவைப் பிரித்தவரின் மனவலியைப் போன்று, தடுக்கமுடியாத ஒன்றாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக