சனி, ஜூன் 04, 2016

வெஜிடபிள் பிரியாணியில் - பாகற்காய்



       திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் பணியின்போது "புலால் மறுத்தல்" அதிகாரம் எழுத ஆரம்பிக்கும் முன் - இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தியதை ஒரு பதிவாய் எழுதி இருந்தேன். அதைப் பலரும் படித்திருக்கக் கூடும். அதில் குறிப்பிட்டிருந்த வண்ணம், அன்று முதல் - அவித்த காய்கறிகள் தான் பெரும்பான்மையில், என் உணவாய் இருக்கிறது. இறையருளால், இன்றுவரை எந்த சிரமமும் இல்லாமல் - ஆரோக்கியமாகவே இருக்கிறேன். சமீபமாய், இடையிடையே - "காய்கறி"பிரியாணி போன்று (மீண்டும்)சமைக்கத் துவங்கி இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன், அதற்கான காய்கறிகளை வாங்க சென்றிருந்த போது "பாகற்காய்" கண்ணில் பட்டது. பாகற்காயை "வெஜிடபிள்"பிரியானில் எவரும் சமைத்து நான் பார்த்ததில்லை; எவரேனும் சமைத்து இருந்தால் சொல்லுங்கள். இருப்பினும், பாகற்காயைச் சேர்த்து சமைக்கலாம் என்று முடிவெடுத்தேன். 

    இதுமாதிரி, சில புதுமைகளை சமையலில் புகுத்தும் என் முயற்சியை முன்பே பதிந்து இருக்கிறேன். "பாகற்காய் குழைந்து விடுமோ?!" என்றோர் ஐயம். எனவே, அதை வறுத்து/வதைத்து - சமைக்கப்பட்ட பிரியாணியுடன் சேர்ப்பது என்று முடிவெடுத்தேன். அந்த வரிசைப்படி தான், மேலுள்ள புகைப்படங்கள் அமைந்துள்ளன. நான் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக அமையவில்லை. ஏனெனில், பாகற்காயின் சுவையும்/சாரும் - சோற்றுடன் சேரவில்லை! என்னுடைய சமையல் குரு - என் தமக்கைதான் என்பதை முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன். அவர் பல்வேறு வகை சமையலைச் செய்பவர்; அவர் இப்படி முயற்சித்தாரா?! என்று வினவவேண்டும். இதற்கிடையில், அடுத்த முறை - மற்ற காய்கறிகளை வதக்கிய பின் - அரிசியைப் போட்டபின், பாகற்காயை "வதக்காமல்" நேரடியாய் சேர்ப்பது என்று முடிவெடுத்துள்ளேன். நீங்கள் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?

உங்கள் அனுபவத்தைப் பகிருங்களேன்!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக