வியாழன், ஜூன் 23, 2016

குறள் எண்: 0326 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாத அறத்தைக், கடைபிடித்து வாழ்வோரின் வாழ்வில்; உயிரைப் பறிக்கும் மரணமும் குறுக்கிடாது.
(அது போல்...)
போட்டியாளரை ஏமாற்றாத திடத்தைக், கொண்ட திறமையாளரின் வெற்றியில்; நம்பிக்கையைச் சிதைக்கும் தோல்வியும் ஊடுருவாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக