சனி, ஜூன் 18, 2016

குறள் எண்: 0321 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாததே நல்வினையாகும்; கொல்லுதல், நல்லவைத் தவிர்த்த தீவினைகள் எல்லாவற்றையும் விளைவிக்கும்.
(அது போல்...)
ஓருறவை முறிக்காததே மனிதமாகும்; முறித்தல், மனிதத்தை நீக்கிய உணர்வுகள் அனைத்தையும் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக