ஞாயிறு, ஜூன் 05, 2016

குறள் எண்: 0308 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0308}

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

விழியப்பன் விளக்கம்: அதீத சக்திகொண்ட நெருப்பில் தள்ளியது போன்ற, தீமையைச் செய்தவர் மேலும்; சினம்கொள்ளாமல் இருக்கமுடிந்தால் நன்மையே.
(அது போல்...)
கூரிய நஞ்சுகலந்த ஈட்டியால் குத்தியது போன்ற, மனவலியைக் கொடுத்தவர் மேலும், பகையின்றி பழகமுடிந்தால் நன்மையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக