புதன், ஜூன் 08, 2016

குறள் எண்: 0311 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0311}

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விழியப்பன் விளக்கம்: சிறப்பளிக்கும் செல்வமே கிடைப்பதாயினும்; மற்றவர்க்கு கெடுதல் செய்ய மறுப்பதே, மனதில் குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
மதிப்பளிக்கும் பதவியே கொடுப்பினும்; பிறரின் பதவியைப் பறிக்க புறங்கூறாததே, சுயத்தை நம்புவோரின் அடிப்படையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக