வெள்ளி, ஜூன் 10, 2016

குறள் எண்: 0313 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0313}

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

விழியப்பன் விளக்கம்: நாம் கெடுதல் செய்யாத போது,  நமக்கொருவர் கெடுதல் செய்யினும்; அதற்கு பழிவாங்க செய்யும் கெடுதல், நமக்கு மீளமுடியாத துன்பத்தையே விளைவிக்கும்.
(அது போல்...)
நாம் சட்டவிரோதமாய் செயல்படாத போது, நம்மீது குற்றச்சாட்டு எழுந்தாலும்; அதைச் சரிசெய்ய சட்டவிரோதமாய் செயல்பட்டால், நமக்கு தீராத மனவுளைச்சலையே தரும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக