திங்கள், ஜூன் 27, 2016

குறள் எண்: 0330 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0330}

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

விழியப்பன் விளக்கம்: கடந்தகாலத்தில், உயிரை உடம்பிலிருந்து பிரித்தவர்கள்; நிகழ்காலத்தில் வறுமையுடன், முற்றிய நோயும் கொண்டு வாழ்வர்.
(அது போல்...)
இளமையில், தேடலிலிருந்து தன்னை விலக்கியவர்கள்; முதுமையில் நிம்மதியற்று, அதீத மறதியும் கொண்டு அல்லாடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக