வியாழன், ஜூன் 16, 2016

குறள் எண்: 0319 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0319}

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

விழியப்பன் விளக்கம்: முற்பகலில் - பிறர்க்குத் தீமையைச் செய்தால்; பிற்பகலில் - நமக்குத் தீமை, தானாகவே வந்தடையும்.
(அது போல்...)
இளமையில் - முதியோரைப் போற்றிட மறுத்தால்; முதுமையில் - நம்மைப் போற்றுவதும், எளிதாக மறுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக