சனி, ஜூன் 11, 2016

குறள் எண்: 0314 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 032 - இன்னா செய்யாமைகுறள் எண்: 0314}

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விழியப்பன் விளக்கம்: நமக்கு தீமைச் செய்தவரைத், தண்டிப்பதற்கு சிறந்த வழி; அவர் மனம் வருந்தும் வண்ணம், அவருக்கு நல்லதைச் செய்வதாகும்.
(அது போல்...)
மனிதம் இல்லாமால் வாழ்வோரைத், திருத்துவதற்கு உகந்த வழி; அவரின் துன்பத்தைப் போக்கும் வண்ணம், அவருக்கு துணை நிற்பதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக