செவ்வாய், ஜூன் 21, 2016

குறள் எண்: 0324 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0321}

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

விழியப்பன் விளக்கம்: நல்ல நெறி என்பது என்னவென்றால் - எந்த உயிரையும் கொல்லக்கூடாது, என்பதை மையப்படுத்திய நெறியே ஆகும்.
(அது போல்...)
தரமான விமர்சனம் என்பதன் அடிப்படை - எந்நிலையிலும் படைப்பாளியை விமர்சிக்காத, அறத்தை ஒட்டிய விமர்சனமே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக