ஞாயிறு, ஜூன் 26, 2016

குறள் எண்: 0329 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0329}

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவா ரகத்து

விழியப்பன் விளக்கம்: கொலையைத் தொழிலாகக் கொண்ட, மனிதம் அற்றவர்கள்; அத்தொழிலின் விளைவை உணர்ந்தோர்க்கு, இழிதொழில் செய்வோரே ஆவர்.
(அது போல்...)
பொய்யை வழக்கமாய் கொண்ட, மனக்குறை உடையவர்கள்; பொய்யின் தீமையை அறிந்தோர்க்கு, குணக்குறை கொண்டோரே ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக