சனி, ஜூன் 25, 2016

குறள் எண்: 0328 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0328}

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்வதால், நன்மையாய் கிடைப்பது - பெரிய வெகுமதியே எனினும்; பகுத்தறிந்தோர்க்கு, அந்த வெகுமதி இழிவானதே ஆகும்.
(அது போல்...)
ஊடகத்தில் கிசுகிசுக்க, பலனாய் கிடைப்பது - உயர் பதவியே ஆயினும்; தர்மம்-உணர்ந்தோர்க்கு, அந்த பதவி கீழ்த்தரமானதே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக