ஞாயிறு, ஜூன் 19, 2016

குறள் எண்: 0322 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0322}

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்ந்தளித்து, சுற்றத்தாரை வாழ்விக்கும் தன்மை; அறம்சார்ந்த எழுத்தாளர்கள் கையாண்ட, அறங்களில் முதன்மையாகும்.
(அது போல்...)
தம்தேவையை நிராகரித்து, குடும்பத்தை உயர்விக்கும் பெற்றோர்; துறவுபூண்ட ஞானிகள் பெற்ற, குருவைவிட உயர்ந்தவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக