வெள்ளி, டிசம்பர் 02, 2016

குறள் எண்: 0488 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0488}

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவரைக் கண்டால், பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுக்க வேண்டும்; அவர்கள் அழிவைக் காணும்போது, நிலைமை நேர் எதிராகும்.
(அது போல்...)
அநீதிக்குப் பதில், அநீதியைச் செய்யாமல் தடுக்க வேண்டும்; அநீதியின் முடிவுக்காலம் வரும்போது, நீதியின் தலை நிமிர்ந்திடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக