வியாழன், டிசம்பர் 15, 2016

குறள் எண்: 0501 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0501}

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

விழியப்பன் விளக்கம்: "அறம்/உடைமை/இன்பம் மற்றும் உயிர்பயம்" - இந்நான்கு காரணிகளின் திறத்தை அறிந்த பின்னரே, ஒருவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
"அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை மற்றும் நிலையாமை" -  இந்நான்கு காரணிகளின் தேவையை உணர்ந்த பின்பே, ஓருறவில் இணைதல் வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக