சனி, டிசம்பர் 17, 2016

குறள் எண்: 0503 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0503}

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

விழியப்பன் விளக்கம்: அரிதான விடயங்களைக் கற்ற, குற்றமற்ற சான்றோர்களைத் தெரிந்து தெளிந்தால்; அவர்களும், அறியாமை இல்லாமல் இருப்பது அரிதானது என்பது புரியும்.
(அது போல்...)
நல்ல பழக்கங்களைப் பழகிய, தீமையற்ற நல்லோரிடம் நெருங்கிப் பழகினால்; அவர்களுக்கும், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை எனத் தெரியும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக