திங்கள், டிசம்பர் 05, 2016

குறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0491}

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

விழியப்பன் விளக்கம்: முழுமையடையச் சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், எச்செயலையும் துவங்கக்கூடாது! அதுபோல், எளிதென எண்ணி இகழ்ச்சியாகவும் எண்ணக்கூடாது!
(அது போல்...)
மக்களாட்சிக்குத் தேவையானக் காரணியை ஆழ்ந்துணராமல், எக்கட்சியையும் ஏற்கக்கூடாது! அதுபோல், சரியென நினைத்து நிராகரிக்கவும் செய்யக்கூடாது!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக