வெள்ளி, டிசம்பர் 09, 2016

குறள் எண்: 0495 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0495}

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின், முதலை எல்லா உயிர்களையும் வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால், பிற உயிர்கள் முதலையை வெல்லும்.
(அது போல்...)
அதீதமான ஆடம்பரமுடன் இருப்பின், ஒருவர் அனைத்து உறவுகளையும் அவமதிப்பர்; ஆடம்பரம் அனைத்தையும் இழந்துவிட்டால், மற்ற உறவுகள் அவர்களை அவமதிப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக