புதன், டிசம்பர் 14, 2016

குறள் எண்: 0500 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0500}

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களை கண்களில் அச்சமின்றி, தாக்கவல்ல ஆண் யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட கொன்றுவிடும்.
(அது போல்...)
பகையுள்ள உறவுகளை உணர்வுகளில் பேதமின்றி, அரவணைக்கும் திட உள்ளத்தை; சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக