ஞாயிறு, டிசம்பர் 18, 2016

குறள் எண்: 0504 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0504}

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் நற்குணங்கள் மற்றும் தீயசெயல்கள் இரண்டையும் ஆழமாய் ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
ஓராட்சியின் பொதுச்சேவை மற்றும் சுயநலம் இரண்டையும் நடுநிலையோடு அலசி; அவற்றுள் அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக