திங்கள், டிசம்பர் 19, 2016

குறள் எண்: 0505 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0505}

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் மேன்மை குணத்திற்கும் மற்றும் சிறுமை குணத்திற்கும்; அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத் தெரிந்து, பின்னர் தெளிவடைதல் வேண்டும்.
(அது போல்...)
சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் மற்றும் தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனிநபரின் ஒழுக்கமே காரணி என்பதை உணர்ந்து, பிறகு விமர்சித்தல் வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக