வெள்ளி, டிசம்பர் 23, 2016

குறள் எண்: 0509 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0509}

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

விழியப்பன் விளக்கம்: தெரியாத எவரையும், ஆராயாமல் தெளியக்கூடாது! அப்படி நேர்ந்தால்; தெளிவதற்குத் தேவையானக் காரணிகளை ஆராய்ந்து, தெளிதல் வேண்டும்!
(அது போல்...)
முறையற்ற உறவை, உணராமல் ஏற்கக்கூடாது! அப்படி நேர்ந்திடின், ஏற்பதற்குத் தேவையானத் தகுதிகளை அலசி, ஏற்றதை ஆயவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக