செவ்வாய், டிசம்பர் 20, 2016

குறள் எண்: 0506 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0506}

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

விழியப்பன் விளக்கம்: அறம்சார் பயமில்லாதோர், எந்தப் பற்றும் இல்லாததால் எப்பழிக்கும் நாணமாட்டர்! எனவே, அவர்களை நம்பித் தெளிவு கொள்ளலாகாது.
(அது போல்...)
வாய்மையின் பலமறியாதோர், எந்த உறுதியும் இல்லாததால் எதற்கும் தயங்கமாட்டர்! ஆதலால், அவர்களுடன் தொடர்ந்து உறவாடுதல் தவறானது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக