ஞாயிறு, டிசம்பர் 11, 2016

குறள் எண்: 0497 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0497}

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

விழியப்பன் விளக்கம்: நிலுவை வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து செயல்களைச் செய்தால்; அஞ்சாமை எனும் துணையின்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து உறவுகளைப் பேணினால்; பாசம் எனும் பிணைப்பின்றி, வேறு பிணைப்பேதும் வேண்டாம்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக