புதன், டிசம்பர் 21, 2016

குறள் எண்: 0507 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0507}

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும் அன்பால் நம்புவது; எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
மனித அடிப்படையை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால் தொடர்வது; அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக