சனி, டிசம்பர் 03, 2016

குறள் எண்: 0489 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0489}

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

விழியப்பன் விளக்கம்: கிடைப்பதற்கு அரிதான காலம் கிடைப்பின்; செய்வதற்கு அரிதான செயல்களை, அக்கணமே செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
சேர்வதற்கு அரிய குருவை சேர்ந்திடின்; கற்பதற்கு அரிதான அடிப்படைகளை, தாமதமின்றிக் கற்றிடல் வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக