வெள்ளி, டிசம்பர் 16, 2016

குறள் எண்: 0502 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0502}

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து/குற்றங்களைக் களைந்து/பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சி நாணுவோரை  - தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
சமமுணர்ந்த கொள்கையில் ஒன்றுபட்டு/ஊழலை எதிர்த்து/அறமழிக்கும் கூட்டணியைத் தவிர்த்துப் போராடுவோரை - அறிந்து போற்ற வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக