சனி, டிசம்பர் 24, 2016

குறள் எண்: 0510 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0510}

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் ஒருவரை நம்புவது மற்றும் நம்பிய ஒருவரை சந்தேகம் கொள்வது - இரண்டும்,  தீர்க்கமுடியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
யோசிக்காமல் ஓருறவில் இணைவது மற்றும் இணைந்த உறவை ஆழ்ந்து யோசிப்பதும் - இரண்டும், முடிவற்ற சிக்கலை உருவாக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக