ஞாயிறு, டிசம்பர் 25, 2016

குறள் எண்: 0511 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0511}

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

விழியப்பன் விளக்கம்: நன்மை/தீமை இரண்டையும் ஆராய்ந்து; நன்மையை மட்டுமே செய்யும் இயல்பினரிடம், வினைகளை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
நியாயம்/அநியாயம் இரண்டையும் உணர்ந்து; நியாயமாய் மட்டுமே வியாபாரம் செய்பவரிடம், பொருட்களை வாங்க வேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக